கிழியத்தொடங்கும் "இந்தி"ய தேசியம்!!!!
Thursday, October 30, 2008
இந்தியா , பல்வேறு இன , மொழிகளைக்கொண்ட பாரதம் என்று தம் மக்களால்அன்போடு அழைக்கப்படும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் ஒருநாடு.....உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடு...இன்று வரைக்கும் இங்கே இந்திய அரசாங்கத்தின் கொள்கைகளொட்டிய பேச்சிற்கு (!) கருத்து / பேச்சுச்சுதந்திரம் எப்போதுமே இருந்து வருகிறது.....
உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடும் , மிகப்பழமையான ஜனநாயக நாடும் புரிந்து கொள்ளும் அணு ஒப்பந்தம் பற்றி உலகத்தின் தலைவரான ஜார்ஜ் புஷ்ஷே சிலாகித்திருக்கிறார் வரலாற்று நிகழ்வென்று......
ஆனால் சமீப காலமாக இந்தியாவில் நிகழும் சமூக மாற்றங்களும் , ஒவ்வொரு மாநிலமும் நடந்து கொள்ளும் விதம் அத்தனை ரசிக்கத்தக்கதாக இல்லை.......தமிழகம் பற்றிய டெல்லியின் தொடர்ந்த புறக்கணிப்பும் , மாநிலசுயாட்சி , மத்திய கூட்டாட்சி என்ற முழக்கத்தினையொட்டிய டெல்லியின் பாராமுகமும் , மாநிலங்களுக்கிடையேயான பிரச்சினைகளை தீர்க்காமல் அதிலிருந்து தப்பிக்க நினைக்கிற டெல்லியின் அணுகுமுறையும் இன்ன பல காரணங்களுமாய்ச் சேர்ந்து "இந்தி"ய தேசியத்துக்கே வேட்டுவைக்குமோ என்ற அளவிற்கு நம்மைச் சிந்திக்க வைத்துவிட்டன...
சில காலங்களுக்கு முன் ஒக்கேனக்கல் பிரச்சினையின் திரையுலக ஆர்ப்பாட்டத்தின் போது , கவிப்பேர்ரசு வைரமுத்து இவ்வாறுகுறிப்பிட்டார் " ஆங்கிலேயர்கள் ஒட்டவைத்துப்போன இந்தி"ய தேசியத்துணியை கிழியாமல் பாதுகாப்பது மத்திய அரசின்கையில்தான் உள்ளது " என்று.. "
அது மட்டுமல்ல , இன்னும் பல சமூகவியல் நிபுணர்களும் , அரசியல் வல்லுநர்களும் , இந்த "இந்தி"ய தேசியம் பல்வேறு மொழி , இன , கலாச்சாரங்கள் நிறைந்த அதே சமயம் தனித்தனியான பல்வேறு எல்லைகளைக் கொண்ட ஆங்கிலேயர் வருகைக்குப்பின் அவர்களால் ஒன்று சேர்த்தப்பட்ட ஒரு தேசம் என்றே கருதுகிறார்கள்.....
இங்கே தமிழன் பேசும் மொழி வேறு , வட்நாட்டினன் பேசும் மொழி வேறு , மொழிகள் மட்டுமே வெவ்வெறு எல்லைகளைக்கொண்ட கோர்க்கப்பட்ட தேசமாக இந்தியா இருந்ததற்கான ஆதாரங்களாக கொள்ளலாம் என்று சொல்லிவிட முடியாது....
கலாச்சாரத்திலும் எவ்விதத்திலும் நாம் ஒன்று பட்டவர்கள் அல்லர்...நமது திருமண முறை வேறு , வடமாநிலத்தவர் திருமண முறை வேறு....நமது முனியாண்டி , அய்யனார் அங்கே இல்லை.........அங்கே கும்பிடப்படும் ஹனுமானை இங்கே யாரும் கும்பிடுவதில்லை.....
இங்கே வசிக்கும் பார்ப்பனர்கள் என்ற ஒரு பிரிவினரைத்தவிர நமது சாதிப்பிரிவுகளுக்கும் , பிற மாநிலத்தவர் சாதிப்பிரிவுகளுக்கும் சம்பந்தமேதுமில்லை...
அக்காலத்திலும் கூட தமிழகம் என்பது தனி ராஜ்ஜியமாக , சேர ,சோழ , பாண்டிய , பிற்காலத்திய பல்லவ அரசுகளாலும் , நாயக்க மன்னர்களாலுமே ஆளப்பட்டது....!!!! வட மாநில மெளரிய அரசுகளும் , கலிங்க அரசுகளும் இங்கே அவ்வப்போது படையெடுத்து வந்ததற்கான ஆதாரங்கள் மட்டுமே உண்டு...!!!
நமது கட்டடக்கலைக்கும் , வடநாட்டினர் கட்டடக்கலைக்கும் ஒரு ஒற்றுமையுமே இல்லை.....
இவற்றை எல்லாம நாம் இங்கே சொல்வதற்கான காரணம் , பிற்காலத்தில் ஒன்றிணைத்துத் தைத்தவர்கள் ஆங்கிலேயர்கள்தான் என்ற உண்மையை பல பேருக்கு உரக்கச்சொல்வதற்காகத்தான்!!!
பிரித்தாளும் கொள்கையையே தங்கள் முழுமூச்சாக கொண்டவர்கள் கும்பினியர்கள் , அவர்களா ஒன்றிணைத்தார்கள் என்று நீங்கள் கேட்பது எனக்குத் தெரிகிறது!!!!!!
இங்கே தமிழனுக்கு ஒரு தேசமுண்டு , கன்னடனுக்கு ஒரு தேசமுண்டு , மராட்டியனுக்கு ஒரு தேசமுண்டு , எல்லையுண்டு , மொழியுண்டு!!!!!!!!!!
ஆனால் பார்ப்பனர்களுக்கு ஒரு தேசமுண்டா , ஒரு எல்லையுண்டா ? கேட்டால் , இல்லையென்றே பதில் வரக்கூடும்!!!!!!! அத்தகைய பார்ப்பனர்களே , ஆங்கிலேயர்களுக்கு உதவி தங்களுக்கென்று உருவாக்கிக்கொண்ட ஒரு தேசமே பாரதம்..........கோர்த்துக்கொண்ட ஒரு எல்லையே இந்தியா.... ...அதனால்தான் எப்போதுமே அவர்கள் "இந்தி"ய தேசத்தையே முன்மொழிகிறார்கள்...தவிர்த்து அதுபற்றிய நதிமூலமும் , ரிஷிமூலமும் பார்க்க வேண்டிய தேவையும் இல்லை என்பதால் இந்த அளவில் அதை நிறுத்திக்கொண்டு , இன்றைய சூழல்களைப் பார்ப்போம்.!!
நிற்க ,
இவ்வேளையில் நாம் இன்றைய சூழலில் "இந்தி"ய தேசியத்தை எதிர்ப்பவர்கள் அல்லர் , நாடும் நாமும் விரைந்து முன்னேற ஒன்றுபட்ட அமைப்பே தேவை , அதுவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்தியா என்னும் வலுவான பேரரசுடன் இணைந்திருப்பதே பலமென கருதுகிறேன்!!! ஆக , இது பிரிவினை பற்றிய பேச்சல்ல என்பதை தெளிவுற விளக்குதல் என் கடமை!!!!
நாம் இங்கே சொல்ல முயல்வது ஏன் நாமோ அல்லது மற்ற மாநிலத்தவர்களோ ஒரு ஒன்றுபட்ட தேசிய உணர்வுடன் , ஒற்றுமையாக கலந்திருப்பதில் எப்போதுமே சங்கடம் ஏற்படுகிறது என்பதைப்பற்றித்தான்!!!!!!
அதற்குரிய பெரும் காரணம் , நமக்குள் முரண்பாடுகளும் , வேறுபாடுகளும் இருக்குமளவிற்கு ஒற்றுமைக்கான காரணிகள் இல்லை என்பதே ஆகும்!!!
சிற்சில குறுநில மன்னர்களாலும், பிராந்திய அரசுகளாலும் , பாளையக்காரர்கள் போன்றவர்களாலும் ஆளப்பட்ட இன்றைய இந்தியாவின் பல்வேறு பகுதிகள் நாளடைவில் ஆங்கிலேயர்களின் வருகைக்குப்பின் ஒன்றுப்பட்ட பாரதமாக ( இந்தியா , பாகிஸ்தான் , பங்களதேஷ் இன்ன பல இன்றைய நாடுகள் ) ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குட்பட்டன...........
ஆங்கிலேயர்களை அனுசரித்தவர்கள் நிலப்பிரபுக்களாகவும் , ஜமீன் தார்களாகவும் ஆயினர் , அனுசரிக்காதவர்கள் கொல்லப்பட்டனர்...
ஒட்டுமொத்த இந்திய தீபகற்பத்தையும் ஆங்கில அரசு ஆதிக்கஞ்செலுத்திய போது , கும்பினியர்களுக்கு எதிரான விடுதலைப்போராட்டமானது அனைத்து தீபகற்ப மக்களையும் ஒன்று சேர்த்தது....
அவ்வாறு ஒன்றிணைந்து போராடியபின்னர் , இரண்டாம் உலகப்போருக்குப்பின்னால் , உலகின் ஆசியக் காலனிகளிலிருந்தும் யூரோப்பிய நாடுகள் புறப்படத் தயாரான வேளையில்அவசர அவசரமாக நாடுகளைப்பிரித்தும் , பல மக்களின் உணர்வுகளைபுண்படுத்தியும் எப்படியாவது இங்கிருந்து உடனே புறப்பட வேண்டும் என்றஅக்கறையில் அவசர கதியில் இந்தியா , பாகிஸ்தான் என்று பிரித்து சுதந்திரம் கொடுக்கப்பட்டது!!!.
இந்தியாவில் காஷ்மீர் குழப்பம் , பாகிஸ்தானுக்கு கிழக்கு பாகிஸ்தான் குழப்பம் , இலங்கைக்கு ஈழம் குழப்பம் . மலேசியாவுக்கு சிங்கப்பூர் குழப்பம் , இந்தோனேசியாவுக்கு பப்புவா நியூ கினியா குழப்பம் - இப்படி சுதந்திரத்திற்கு பின்னதான குழப்பமிருந்த நாடுகள் பட்டியல் இன்னும் நீள்கிறது....
அதில் இந்தோனேசியாவும் , மலேசியாவும் தமது முன்னேற்றங்களுக்கான சரியான வழியை கண்டறிந்து சிங்கப்பூரையும் , நியூ கினியாவையும் , திமுர்லெஸ்டேவையும் தனித்தனி நாடுகளாக பிரித்துக்கொடுத்து பீடு நடைபோட்டுக்கொண்டிருக்கின்றன...ஆனால் , இலங்கை ? எல்லோருக்குமே தெரிந்த ஒன்றுதான்.....
இந்தியா எனும் மாபெரும் தேசத்தைக் கட்டியமைத்ததிலும் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் பங்கு உண்டு!!!!! ஆனால் இன்றைக்கும் அத்தேசத்தை கட்டிக்காக்கும்பணியில் அது வெற்றிகரமாக ஈடுபடுகிறதா அல்லது தேசியக்கட்சி என்றுதன்னை விளித்துக்கொள்ளும் "பாஜக"வாவது அப்பணியில் ஈடுபடுகிறதா என்றால் இல்லையென்பதே உண்மை நிலை..
அவ்வாறு ஒன்றிணைக்கப்பட்ட பற்பல தேசங்கள் , மக்களும் ஒருகலாச்சாரத்தை , ஒரு மொழியை , ஒரு வழிபாட்டு முறையைபெற்றிருந்தார்களெனில் இன்றைக்கு ஒவ்வொரு மாநிலமும் தத்தமதுசுயநலனையே முன்னிருத்திக் கொண்டிருந்திருக்க மாட்டார்கள் என்றேதோன்றுகிறது...
ஒட்டுமொத்த இந்திய நலன் என்ற வகையில் , நடுவண் அரசுகள் மேற்கொள்ளும்எந்தவொரு முயற்சியுமே உறுதியாக இல்லை.....
காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கருநாடகத்தை எந்த தேசிய அரசியல்கட்சிகளுமே கண்டிக்க மறுக்கின்ற ஒரு சூழலில் தமிழகம் இதற்கு என்னதான்தீர்வு ? பாகிஸ்தானுடன் நமக்கு பிரச்சினை இல்லையே என்று கேட்பதில்தவறென்ன இருக்க முடியும்??????
தமிழகத்திலிருக்கும் ஒக்கேனக்கலில் நமது மாநிலம் செழிப்புற் திட்டம் தீட்டும்போது அடுத்த மாநிலம் அதைத்தடுக்குமானால் , நமது ஒற்றுமை உணர்வைக் கட்டிக்காப்பது நடுவண் அரசின் பணி அல்லவா??? அதை நடுவண் அரசுமுறையாகச்செய்யதா ?? இல்லையே , மாறாக அமைதியை கெஞ்சியல்லவா கலைஞரிடமிருந்து தற்காலிகமாக பெற்றது , அதுவும் தனது தேர்தல்வெற்றிக்காக???
பெரியார் அணைக்கட்டின் நீர்மட்டம் உயர்த்த எத்தனை தடங்கல்கள்....???? என்னதான் உருப்படியாக செய்தது இந்த நடுவண் அரசு?? அல்லது நடுவண்அரசின் தமிழக பிரதிநிதிகள் அது பாசகவாக இருக்கட்டும் , காங்கிரஸாக இருக்கட்டும்.....ஒட்டுமொத்த இந்தியாவாக பாருங்கள் என்று ஏன் குரல்கொடுக்கவில்லை ???
பக்கத்து மாநிலத்தில் அவர்களுக்கு ஆதரவாகவும் , இங்கே நமக்காதரவாகவும் பேசுவதென்பது சற்றேறக்குறைய இரு பகையாளி நாடுகளின் பேச்சுப்போல இல்லையா?? ஆமென்றால் பிறகெதற்கு தேசியக்கட்சிகள் , எல்லாக்கட்சிகளையும் அந்தந்த மாநிலத்திற்கான கட்சிகளாய் அறிவித்துவிடலாமே???
இப்படி தொடர்ச்சியான பிரச்சினைகளையும் , ஆறப்போட்டு அதன்சூட்டைத்தணிக்கவே முயற்சித்து வந்த இந்திய நடுவண் அரசு , தமிழர்கள்போலவே எல்லோரும் தூங்கிக்கொண்டே இருப்பார்கள் என்றே நினைத்ததுபோலும்!!! தமிழர்களை ஏமாற்றுவது போலவே எல்லோரையும்ஏமாற்றிவிடலாம் என்று நினைத்தது போலும்!!!
அதனால் தான் ராஜ் தாக்கரேவின் நவ் நிர்மாண் சேனா பற்றியும் ஒருஅலட்சியப்போக்குடனே நடுவண் அரசு இருந்தது!!!
சற்றேறக்குறைய , 90களில் கருநாடக வாழ் தமிழர்கள் அடித்துத்துரத்தப்பட்டனரே அப்போதாவது "இந்தி"ய தேசியம் கிழியத்தொடங்குகிறது என்ற உண்மையை டெல்லியில் ஆள்பவர்கள் உணர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கலாம்தான்...ஆனால் தாக்கப்பட்டவர்கள் தமிழர்களென்பதால் நமதுகுரல் டெல்லிக்கு எட்டாததில் வியப்பொன்றுமில்லை!!!!!
நமது குரல் டெல்லிக்கு எப்போதுமே எட்டுவதில்லை என்பதனை இவ்விடயம் மட்டுமல்ல , சமீபத்திய தமிழின ஆதரவுப்போராட்டங்கள் பெட்டிச்செய்தியாக இந்திய ஊடகங்களின் அற்ப கவனத்தையே பெற்றன என்பதும் , அமிதாப்பச்சனின் உடல்நிலை குறித்த கவலை கூட ஈழத்தமிழினத்தின் வலிகளை பற்றியகவலையை விட அதிக கவனம் பெற்றிருந்தமை விரிவாக விளக்குகிறது!!!!
குறிப்பாக , விந்தையிலும் விந்தையாக என்றுமே பெரும்பான்மை தமிழர்களின் உணர்வினை பிரதிபலிக்காமல் தனி ஆவர்த்தனஞ் செய்யும் சுப்பிரமணிய சுவாமியையும் , சோவையும் தான் அடிக்கடி பேட்டி கண்டு ஒலி/ஒளி நமது உணர்வுகளுக்கும் , டெல்லிக்கும் சம்பந்தமேதுமில்லை என்பதையும் உணர்த்தியது!!!!!!
அதே நிலைதான் அஸ்ஸாமிலும் . பீகாரிகளை அஸ்ஸாமிய பூமிபுத்ராகொள்கையுடைய இயக்கங்கள் அணிஅணியாக கொன்று குவித்த போதும் விழித்துக்கொள்வதாயில்லை இந்திய நடுவண் அரசு...
நிற்க ,
அத்தகையதொரு வலுவிழந்த உணர்வாகத்தான் வெறும் வெற்றுக்கூச்சலாகத்தான் ராஜ் தாக்கரேவையும் கருதியது நடுவண் அரசு...ஆனால் அவரோ தன் கோரிக்கை வெகு வலுவானது , எங்கள் உணர்வுகளைப் புறக்கணிக்கக் கூடாது என்று வன்முறை மூலம் நிகழ்த்திக்காட்டிவிட்டார்..
வன்முறை எதற்குமே தீர்வல்ல என்பதையும் , தாக்குதல்கள் என்பது தவறான அணுகுமுறை என்பதையும் எப்போதுமே நாம் ஒத்துக்கொள்வோம்!!! ஆனால் , அந்த வன்முறையை காரணம் காட்டி ராஜ் தாக்கரேயின் நியாயமானகோரிக்கைகளையும் , நியாயமான வாதங்களையும் முற்றிலும் புறந்தள்ளி விடமுடியாது!!!!
அவரது மிகத்தெளிவான கொள்கையென்ன வென்றால் '' மராட்டியத்தில் மராட்டியர்களுக்கு முன்னுரிமை கொடு" இதுதானே ? இதிலென்ன தவறிருக்கமுடியும்???
என்னடா இவன் , சில பத்திகளுக்கு முன் தான் கருநாடக தமிழர்கள் துரத்தப்பட்டதை கண்டித்துப்பேசினான் , இப்போது ப்ளேட்டை திருப்பிப்போடுகிறான் என்கிறீர்களா??? குழப்பமே வேண்டாம்!!!
கருநாடகத்தில் தமிழர்கள் கன்னடர்களின் வாழ்வுரிமையைபறிக்கவில்லை...........தத்தமது பூமியில் விவசாயம் பார்த்துக்கொண்டிருந்தார்கள்...நிலச்சுவான்தார்களாக இருந்தார்கள்.......முன்பு தாங்களிருந்த பகுதி பிற்காலத்தில் கர்னாடக் மாநிலமாக "இந்தி"ய தேசியத்தால் கட்டப்பட்டது......இரண்டுமே வேறுவேறானவை!!!
ஆனால் , மும்பையில் குவியும் பீகாரிகளாலும் , உத்தரப்பிரதேசத்துக்காரர்களாலும் தமது மாநில மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கோரிக்கைக்காக அவர் போராடுகிறார்.......அவர் முன்னெடுத்த வழி வேண்டுமானால் தவறாக இருக்கலாம்...அதே சமயம் அவரின் கோரிக்கை ஒரளவிற்கு நியாயமானதாகவே எனக்குப்படுகிறது!!!! அதில் பாதிக்கப்படுபவர்கள் பீகாரிகளானாலும் சரி , தமிழர்களானாலும் சரி...!!!
"இந்தி"ய தேசியத்தை கட்டிக்காப்பாற்றுவதற்காக மராட்டியம் கொடுத்த விலை அது....மற்ற மாநிலத்தவனுக்காக நான் ஏன் விலை கொடுக்க வேண்டும் என்று ஒருவர் கேட்பதுதான் இன்றைக்கு மன்மோகன் சிங்கைக் கூட மனம் வெதும்பிபேச வைத்திருக்கிறது!!!!! தேசியபாதுகாப்புச்சட்டத்தில் அவரை உள்ளே தள்ளுமாறு மத்திய அமைச்சரவையும் கேட்டுக்கொண்டிருக்கிறது...
அதாவது , அத்தகைய உணர்வுள்ளவர்களின் உணர்வுகளை மதிக்காமலேயே தற்காலிகமாக அவரைச் சிறையிலடைத்து மீண்டும் பிரச்சினையை தள்ளிப்போடவே முயன்றிருக்கிறது நடுவண் அரசு...எப்போதும் போலவே..
இன்றைக்கும் இந்திய அளவில் தொழில் வளத்தில் / விவசாயத்தில் முன்னேறிய மாநிலங்களென்றால் பஞ்சாப் , குஜராத் , மராட்டியம் , தமிழ்நாடு இவை நான்குமட்டுமே.........வேண்டுமானால் தற்போது கொஞ்சமாக முன்னேறி வரும் ஆந்திராவையும் , அரியானாவையும் இந்தப்பட்டியலில் இணைத்துக்கொள்ளலாம்!!!!
இந்த மாநிலங்களிலிருந்து வரும் வருமானத்தையெல்லாம் தூக்கி ஒரே நிதியில் போட்டுத்தான் "இந்தி"ய தேசியத்தைக்காப்பாற்றி வருகிறது நடுவண் அரசு!!!!!!!! அதாவது , நீ அரிசி கொண்டு வா , நான் உமிகொண்டு வர்றேன் , ரெண்டு பேரும் ஊதி ஊதி அரிசி சாப்பிடுவோம் என்று சொல்வார்களே அதுமாதிரிதான்....!!!
இந்தியாவின் பெருத்த ஜனத்தொகையை தன்னிடத்தே கொண்டுள்ள உபியும் , பீகாரும் , இன்னபல மாநிலங்களும் இந்தியாவின் ஒட்டுமொத்த வளத்தை தின்றுகொழிக்கின்றன என்ற குற்றச்சாட்ட்டும் நீண்ட நாட்களாகவே எழுப்பப்படுகிறது...!! வடமாநிலங்களைநிர்வாக வசதிக்காக சலசலப்பின்றி பிரித்துத் தந்த நடுவண் அரசு , ஆந்திராவில் மக்களால் தெலுங்கானா மக்களால் விரும்பப்படும் தனித்தெலுங்கானாவை உருவாக்க மறுப்பதும் விசித்திரமே...தெற்கத்தியர்களின் கோரிக்கை டெல்லியை எட்டுவதில்லை என்பதற்கான அடுத்த உதாரணம் அது....
காஷ்மீரிலும் , ஒரிஸாவிலும் , அஸ்ஸாமிலும் உள்நாட்டுக்கலவரத்தை அடக்க ராணுவத்தை அனுப்பும் இந்திய நடுவண் அரசு தமிழக மீனவர்களை பாதுகாக்கமட்டும் ராணுவத்தை அனுப்ப ஏன் மறுக்கிறதென்று கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது என்பதே நமது "இந்தி"ய தேசியம் சொல்லிக்கொடுத்திருக்கும் பாடம் என்பது நான் சொல்லவந்த தலைப்பிற்குச் சற்றும் சம்பந்தமில்லை என்றாலும் சொல்லும் கருத்தில் நாம் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற உண்மையுமிருப்பதால் சொல்ல வேண்டிய கட்டாயமுமிருக்கிறது..!!
நமக்குள் உள்ள வேறுபாடுகளைக் களைந்து இனியும் எந்த சச்சரவுமில்லாமல் அண்டை மாநிலங்களுடன் சுமூகமாக இணைந்திருப்பது இனியும் பகல் கனவுபோலவே தோன்றுகிறது!!!
ஏன் வாய்ப்பில்லை என்று வியப்புடன் வினவுகிறீர்களா?? வெகு சாதாரணகாரணம்தான்...நாம் இயற்கையில் ஒன்றுக்கொன்று தொடர்பு பட்டவர்கள்இல்லையெனினும் சுதந்திரத்துக்கு முன் , நமக்கெல்லாம் சுதந்திரம் என்றபொதுவான முழக்கமிருந்தது..........இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியர்களையும் ஒன்று சேர்க்கும் எந்தக்காரணியுமில்லை..
அப்படி இருந்தவற்றை நமது ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகள் மண்ணோடு மண்ணாக்கிவிட்டார்கள் என்பதே உண்மை!!
தேசிய உணர்வு போய் , தன் இன , மொழி , சாதி , தன் மாவட்டம் , தன் தாலுக்கா , தன் ஊர் , தன் தெரு , தன் வீடு என்ற குழு உணர்வு வந்ததற்கு காரணம் இந்திய அரசியலமைப்பே..........அதிகாரமும் , நிதியும் , முன்னேற்றமும் சமமாக பங்களிக்கப்படவில்லை என்பதே அதிமுக்கியக்காரணம்.......
இனியாவது நடுவண் அரசு , எந்தவொரு மாநிலங்களுக்கிடையேயான உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளை ஆறப்போட்டு பிரச்சினைகளை மறக்கடிக்கமுயலாமல் , தீர்த்து வைக்க முயலுமானால் கிழியத்துவங்கிவிட்ட இந்தியதேசியம் பிழைக்க வழியிருக்கிறது!!!!!
உடனடியாக அதிகாரப்பரவலையும் , தன் இன / மொழி உணர்வுகளையும் புறக்கணிக்காமல் நமது அரசியல் கட்டமைப்பையும் , மாநிலக்கட்சிகள் தாங்கிப்பிடிக்காத மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் தடங்கலில்லாத பதவிக்காலத்தைக்கொண்ட ஆனால் செயல்பாடுகளை விமர்சிக்கும் / தவறானமுடிவுகளை ரத்து செய்யும் நாடாளுமன்றத்திற்கு கட்டுப்பட்ட அதிபர் முறைதேர்தலை கொண்டு வரா விட்டால் "இந்தி"ய தேசியம் முற்றிலும் கிழிந்துதொங்கப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லையென்றே தோன்றுகிறது!!!!!!!!!
ஏன் தடங்கலில்லாத பதவிக்காலத்தைக்கொண்ட அதிபர் முறை??
காரணம் , இன்றைக்கு நடுவண் அரசை ஆதிக்கஞ்செய்துகொண்டிருக்கும் மாநிலக்கட்சிகளாலும் , கூட்டணி அரசுகளாலும் எந்தவொரு முடிவையுமே தீர்க்கமாக எடுப்பதென்பது இயலுவதில்லை...கூட்டணிக்குழப்பங்களை சமாளிக்கவே இந்தியப்பிரதமருக்கு நேரம் போதவில்லை..
இன்னொன்று , அதிபர் முறை தேர்தலென்பது மக்கள் தங்களை ஆளப்போகும் நபர் யாரென்று தெரிந்து , அவர்தம் கொள்கைகளை அறிந்து அவர்களைத் தேர்ந்தெடுக்க ஒரு வாய்ப்பாய் இருக்கும்...
இல்லாவிட்டால் தங்களுக்கான எம்பிக்கள் ஆதரவினைப் பெற்று தகுதியில்லாதவர்களும் , ஸ்டேம்ப் பேடு ஆட்களும் பிரதமராவதைத் தவிர்க்க இயலவே இயலாது......
ஒரு அணு சக்தி ஒப்பந்தம் , நாட்டிற்கு முக்கியத்துவம் வாய்ந்த இவ்வொப்பந்தம் நிறைவேற எத்தனை சர்ச்சைகள் ??? ஆனால் இன்றுவரை மக்களுக்கோ , அரசியல் கட்சிகளுக்கோ அதன் ஷரத்துக்கள் முழுமையாக தெரியவில்லை...காரணம் , கூட்டணிக்குழப்பங்களும் , அரசிற்கு தன் நிலையை தெளிவுற விளக்கவாய்ப்பளிக்க படாமையுமாகும்...எதைச் சொன்னாலும் அதை அரசியலாக்க துடிக்கும் எதிர்க்கட்சிகளே அதற்கான பழியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.....
ஒட்டுமொத்த நாட்டிற்கு பலன் தரக்கூடிய சேது சமுத்திரத்திட்டம் கிடப்பில் போடப்பட்டதற்கும் நமது குழப்பகரமான அரசியல் வழிமுறைகளே காரணம் ஆகும்........
இன்றைய ஒன்றுபட்ட இந்தியாவே நாம் முன்னேற சிறந்த வழி , பிரிவதற்கான சந்தர்ப்பமும் , தேவையும் இப்போதில்லை என்பதையுமே நாம் சுட்டிக்காட்டவிழைகிறோம்.......
ஆகவே , "இந்தி"ய தேசியத்தில் நமக்கு உடன்பாடு உண்டா இல்லையா என்பதைவிட இன்றைக்கு அது ஒன்றுபட்டு பரவலான முன்னெற்றம் காண வேண்டியதேவை இருக்கிறது என்பதை மட்டும் நாம் வலியுறுத்துகிறோம்!!!
இந்திய தேசியம் - கிழியத் தொடங்கி விட்டது..அது மேலும் சீரழியாமல் காப்பாற்றவேண்டிய பொறுப்பு இந்திய அரசுகளுக்கு உண்டு...இல்லாவிட்டால் அதற்குரியவிலைகளை நாம் கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துவதோடு நாம் முடித்துக்கொள்கிறோம்!
உங்கள் விமர்சனங்களும் , கருத்துக்களும் நமது கருத்துக்களை சீர்செய்யவெகுவாய் உதவுமென்பதால் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கப்படுகின்றன...








'‘.